search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் பெட்டி"

    • 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.
    • புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    உடுமலை : 

    பள்ளிகளில் புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சினை என்னவென விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற்றோர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்டோர் கொண்ட 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.

    இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்படும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணும். நடப்பு கல்வியாண்டு கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிகள் செயல்படும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:- அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது. இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார் அதற்கு காணப்பட்ட தீர்வு குறித்து ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் விபரம் கேட்டறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை நகரில் 50-க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பெரும்பான்மையான பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. சில பள்ளிகளில் சிதிலமடைந்த கட்டமைப்புகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

    சிங்கப்பூர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டி, கழிப்பறை கதவுகள் சிதிலமடைந்து பல நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தரைதளம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிற்கிறது. பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. இவ்வாறு கட்டமைப்பு சரியில்லாததால் பெற்றோரும் அப்பள்ளிகளின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

    நகராட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதும், பலரும் பொறுப்பு பதவிகளில் இருப்பதால் கட்டுமானபணிகள் பலவும் தாமதமாகிறது. இரண்டு மாதங்கள் விடுமுறை இருந்தும் பணிகள் முடிக்கப்படாமல், தாமதமாகி க்கொண்டிருப்பதால் பள்ளிகளில் இடையூறாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாதகமான முறையில் கட்டமைப்பு பணிகள் அரைகுறையாக இருப்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை யின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும் வட்டார அளவி லான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரி யும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் வரும் புகார்களை கையாள தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உட்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×